Subscribe

BREAKING NEWS

31 December 2017

மஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் அழைப்பிதழ்

இறை அடியார்களே.

அனைவருக்கும் வணக்கம். சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும் அகத்தியர் பெருமானின் ஆயில்ய பூசை தற்போது சீரோடும், சிறப்போடும் பல ஆலயங்களில் நடைபெற்று வருகின்றது. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில், பஞ்செட்டி திருக்கோயில், பாண்டிச்சேரியில் உள்ள அகத்தியர் ஞானம் இல்லம், பனப்பாக்கம் மாயூரநாதர் கோவில் என அகத்தியரின் அருள் வெளிபட்டுக் கொண்டிருப்பதைக் கண்கூடாக உணர்ந்து வருகின்றோம்.

இந்தப் பதிவில் அகத்தியர் ஞானம் இல்லத்தில் நடைபெற உள்ள மஹா ஆயில்ய திருமண வைபவம் அழைப்பிதழ் தருகின்றோம். வாய்ப்புள்ள அடியார்கள் கலந்து கொண்டு அகத்தியர் ஆசி பெற வேண்டுகின்றோம்.

அதற்கு முன்பாக சில அகத்தியர் மொழிகள் 


சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே.


மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன்
மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு
காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
பலவேத சாஸ்திரமும் பாரு பாரு;
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே.



பாரப்பா நால்வேதம் நாலும் பாரு
பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி;
வீரப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி
வீணிலே யவர்பிழைக்கச் செய்த மார்க்கம்;
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள்
தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்;
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ!
ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே!



 


மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம்  மார்கழி மாதம் 20 ஆம் நாள் (04/01/2018) வியாழக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,
அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 6:30  மணி முதல் பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லத்தில் அருள்பாலிக்கும் அகத்தியர் லோபாமுத்திரை  தம்பதியினருக்கு அபிஷேகம், அலங்காரம்,திருமண வைபவம்  செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். 

  6:30 மணி - அபிஷேகம் 
  9:00 மணி - ஹோமம் 
10:30 மணி -திருக்கல்யாணம் 
11;30 மணிக்கு மேல் - திருக்கல்யாண விருந்து 

அனைவரையும் வருக! வருக!! என்று பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லம் சார்பாக வரவேற்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு; சுவாமிநாதன் 9894269986 & ராகேஷ் 7904612352

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 
முந்தைய பதிவுகளுக்கு :
 மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2_31.html

 மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_30.html
 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm_29.html

 விவேகானந்தர் விஜயம் (1)  - http://tut-temple.blogspot.in/2017/12/1_27.html


 சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html 

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html


அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html



 மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_18.html




போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html


 வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html
 
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html



மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

பஞ்சபூத தத்துவத்தில் ஒன்றாய் அக்னியாக கடவுளை வணங்கும் நாளே திருக்கார்த்திகை. கார்த்திகை என்றால் முருகப் பெருமானின் அருள் இல்லாமலா? முருகனின் அவதாரமே கார்த்திகையில் மேன்மை பகிர்வதே.கார்த்திகையின் ஒவ்வொரு நாளும் புண்ணிய நாளே. இந்த முறை தவற விட்டவர்கள் அடுத்த முறை சரியாக கைக் கொள்ளவும்.

ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று, கோரும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று, குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று, மாறுபட சூரரை வதைத்த முகம் ஒன்று, மற்றும் வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று என்று முருகப் பெருமானே மொழிந்ததாக ஒரு விளக்கம் உள்ளது. இந்த ஆறுமுகங்களும் ஐஸ்வர்யம். வீரம்.தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் என்ற ஆறுகுணங்களைக் குறிக்கின்றது.கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து வழிபடுவோர், நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.

 

தாயுமானவர்,அருணகிரிநாதர் தொடங்கி வள்ளலார் வரை அனைத்து மகான்களும் தீப ஒளி வழிபாட்டை முன்னிறுத்து வருகின்றனர். பக்தியின் உச்சமும், ஞானத்தின் ஆழமும் மெய் விளக்கில் தான் தொடங்குகின்றது.


அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!

அருள் ஒளி என் தனி அறிவினில் விரிந்தே 
அருள் நெறி விளக்கெனும் அருட் பெருஞ் ஜோதி ’


’அருள் விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே 
மருள் கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே 
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா
தெய்வநடத் தரசே நான் செய்மொழி ஏற்றருளே.’

என்று  பாடி  வள்ளலார் இறைவனை ஜோதியாய் தரிசித்தார். 


இத்தகு சிறப்பு கொண்ட கார்த்திகை கொண்டாட்டத்தில், நாம் நம் TUT உறவுகளோடு குன்றத்தூர் சென்றஅனுபவ பதிவை  இருந்தோம்.இங்கே மீண்டும் தொடர்வோம்.

வாங்கிச் சென்ற இலுப்பெண்ணெய் கந்தலீஸ்வரக்குக் கொடுத்தாகிவிட்டது. மீதம் இருந்த எண்ணையை தர குன்றத்தூர் முருகன் கோவில் சென்றோம், குன்றத்தூர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அதுவும் பச்சை வண்ண ஒளிர் விளக்குகள் கண்ணைப் பறித்தன. கோயிலுள் சென்றால், சரியான கூட்டம். அங்கே தீபம் ஏற்ற தயார் செய்து கொண்டிருந்தார்கள். நம்மால் உள்ளே சென்று எண்ணெயைக் கொடுக்க முடியவில்லை. அப்படியே உள்ளே கொடுக்கும்படி, கை மாற்றிவிட்டோம். சற்று நேரத்தில், குன்றத்தூர் மலையில் தீபம் ஏற்ற, குருக்கள் மற்றும் அனைவரும் மேளதாளத்துடன் வெளியே வந்து, குன்றத்தூர் முருகனை வலம் வந்து, அப்படியே வெளியே வந்தார்கள். நமக்கு மெய் சிலிர்த்தது. விளக்கின் ஒளி, மேள தாள ஒலி, இரவின் மடி, குன்று இருக்கும் குன்றத்தூர் சொல்லவா வேண்டும்? சொல்லில் அடங்கா சொர்க்கம் இது 




 மேலே நீங்கள் பார்ப்பது, குன்றத்தூர் முருகன் கோயிலில் இருந்து ஜோதி கொண்டு வரும் கண்கொள்ளாக் காட்சி 



 தீப மேடை தயார் செய்யும் காட்சி. இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அற்புத தீபக் காட்சி. திருஅண்ணாமலை செல்ல முடியாதவர்கள் இங்கே தரிசிக்கலாம்.




குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! என்று அரோகரா நாமம் ஒலித்துக் கொண்டே இருந்தது. தீபம் ஏற்றியவுடன் வெடி சத்தம் காதைப் பிளந்தது.




குன்றத்தூர் முழுவதும் ஒளி நிறைந்து காணப் பட்டது. மீண்டும் ஒருமுறை தீப தரிசனம் பெற்றோம் 








ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

 ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.



என்ற வள்ளலாரின் வாக்கு நம் மனத்தில் ஒளிர்ந்தது. மீண்டும் மீண்டும் ஜோதியுள் உறைந்தோம்.















குன்றத்தூர் முழுதும் கோலாகலம் தான். இதோ ஒளி வெள்ளத்தில் முருகன் கோவில்.












தீபம் ஏற்ற எண்ணெய் கொடுக்க வந்த நமக்கு இப்படியொரு தரிசனம் கொடுத்தமைக்கு நன்றி கூறிவிட்டு, கீழே கந்தலீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம்.


- மீண்டும் அடுத்த பதிவில் காண்போம் 


முந்தைய பதிவிற்கு :
கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - http://tut-temple.blogspot.in/2017/12/1.html

30 December 2017

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும்
முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்

என்கிற முதுமொழி நாம் கேட்டிருப்போம்.இந்த பதிவிலும் பல மூத்தோர் மொழிகளை இயற்கை மருத்துவம் என்ற புத்தகத்தில் இருந்து இங்கே தொகுத்து தருகின்றோம். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பது பற்றி ஒரு குட்டிக் கதை பார்த்து விட்டு, இனிக்கும் அமிர்தத்தை உண்போம்.


இரண்டு நாடுகள் சிவகிரி, சக்திகிரி என்று இருந்தன.( இப்படி நாடு இருந்ததா என்று தெரியவில்லை. நாம் கற்பனையில் இங்கே வைத்துள்ளோம்.) சிவகிரியை சக்திமாறனும், சக்திகிரியை சிவமாறனும் ஆண்டு வந்தார்கள். ஆனால் சக்திகிரியை ஆண்ட சிவமாறனுக்கு பக்கத்து நாடான சிவகிரியை பிடிக்க ஆசை.

பல முறை படையெடுத்தான். ஆனால் சக்திமாறனை வெல்ல முடியாமல் தோற்று ஓடுவதே வழக்கமாகி விட்டது. ஆனால் ஒரு முறை படை திரட்டி சென்று சிவகிரியை வென்று விட்டான்.

இப்போது சிவகிரியை ஆண்ட மன்னன் சக்திமாறன் தலைமறைவாகி விட்டான்.ரியான  பயிற்சியும்  படைபலமும் இல்லாததால் தோற்று நாட்டை விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்து வாழ்ந்தான்.ஆனாலும் அடிக்கடி வீரர்களைத் திரட்டி சக்திகிரி மீது போரிட்டான்.எப்படியாவது   தன தாய்நாட்டை மீட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் படைதிரட்டிவந்தான் சக்திமாறன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவி ஓடினான்.                      


 ஒருநாள்  களைப்புடன் காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தான்.தனக்குள் எண்ணிக் கொண்டே நடந்தான்."பல  முறை போராடியும்  சிவமாறனை  வெல்ல இயலவில்லையே.என் படையும் பெரிதாகத்தானே இருக்கிறது. என்ன காரணம் புரியவில்லையே "என்று    நடந்தபடி சிந்தித்தவனுக்கு  காட்டுக்குள் வெகு தொலைவு வந்தது கூடத் தெரியவில்லை. களைப்புடன் ஒரு பாறையில் அமர்ந்தான்.பசிவேறு வயிற்றைக் கிள்ளியது.சற்றுத் தொலைவில் ஒரு குடிசை வீடு தென்பட்டது.

 ஆவலோடு அந்த வீட்டுக்கு சென்று சற்றுத் தொலைவில் நின்றபடி "அம்மா" என அழைத்தான்.அந்த வீட்டுக்குள்ளிருந்து  எழுபது வயதுள்ள பாட்டி  வெளியே வந்தார்.அவரிடம் "அம்மா.மிகுந்த களைப்பாக இருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது ஏதேனும் கொடுத்து உதவினால்  மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன்."என்று சொல்லி அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டான்.


"ஐயோ பாவம்! கொஞ்சம் பொறுப்பா
வருகிறேன்.ஏழையின் வீட்டில் களிதான் இருக்கிறது.
அதையே தருகிறேன்.உண்டு  பசியாறு."என்றவள் உள்ளே சென்று ஒரு தட்டில்  சூடானகளியை வைத்து அதில் சூடான குழம்பையும் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.
              

நல்ல பசியோடிருந்த சக்திமாறன்  அதை வாங்கி தன்  ஐந்து விரல்களாலும் களி உருண்டையை அழுத்தினான். நல்ல சூடாக இருந்த களி  அவன் கையை நன்கு சுட்டு விட்டது "ஹா! ஹா!" வெனத் தன கையை உதறியபடி விரல்களை வாயில்  வைத்துக் கொண்டான்.
 இதைப் பார்த்து அந்தப் பாட்டி சிரித்தாள். அத்துடன்"ஏனப்பா நீ களி  தின்பது எங்கள் மன்னன் சக்கதிமாறன்  படையெடுப்பது போல் இருக்கிறது."
 

இதைக் கேட்டு சக்திமாறன்  ,"என்னம்மா சொல்கிறீர்கள்?நீங்கள் சொல்வது புரியவில்லையே." என்றான் ஆவலாக.

" பின்னே என்னப்பா, களியை அதைச் சுற்றிலும் ஓரமாகவே தின்று வந்தால் குறைந்து கொண்டே வரும் முழுவதும் ஆறிக்கொண்டே வரும்.சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கலாம்,அதைவிட்டு நடுவில் கைவைத்தால் சுடாதா?"என்றாள்  சிரித்தவாறே.
              
"இதற்கும் மன்னரின் படையெடுப்பிற்கும் என்ன சம்பந்தம்?" என்றான் சக்திமாறன்.

           
  "புரியவில்லையா?, படையெடுத்து எல்லையில் இருக்கும் நாடுகளைப் பிடித்தபின்னரே தலைநகரில் நுழையவேண்டும் அப்போதுதான் பகைவரின் படைபலம் குறையும் நமக்கும் வெற்றி கிடைக்கும்."என்றாள்  புன்னகையுடன் பாட்டி


  பாதி தின்றவுடன் களியை அப்படியே வைத்த சக்திமாறன்  உடனே புறப்பட்டான்.         
"தாயே, தங்கள் அறிவுரைக்கு நன்றி. இப்போதே செல்கிறேன் நீங்கள் சொல்லியபடியே போராடி வெற்றி வாகை சூடி உங்களை சந்திக்கிறேன்,வருகிறேன்." என்று கூறி
அவளை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டான்.
ஒரு சிறு படையுடனேயே தலைநகரின் சுற்றியிருந்த கிராமங்களைப் பிடித்த  சக்திமாறன் விரைவில் சிவமாறனின்  தலைநகரையும் கைப்பற்றினான்.தனக்குக் கப்பம் கட்டச் செய்து தன்
நாட்டில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தான்.
 

 உடனே காட்டுக்குச் சென்று அந்த மாதரசியை அழைத்து வரச்சொல்லி ஆணையிட்டான்.அவளுக்குப் பொன்னும் பொருளும் தந்து தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான்.
இப்போது புரிகின்றதா?
மூத்தோர் சொன்ன சொல் என்றும் பயன்படக்கூடியது என்பதை நாம் என்றும் மறவாதிருக்க வேண்டும்.

சரி. இனி நாம் கீழேக் கொடுக்கும் அமிர்தத்தை அருந்துங்கள். வாழ்வில் கடைபிடியுங்கள்.







ஆத்திச்சூடி ...அறம் செய்ய விரும்பு என்பதெல்லாம் ஆரம்பப் பள்ளியில் படித்திருப்போம். காலங்கள் மாறலாம். ஆனால் தர்மம் மாறாது, தர்மத்தை,நீதியை சொல்லித் தர வேண்டும் எனவே ஆரம்பப் பள்ளியில் இவற்றை சொல்லிக் கொடுத்தார்கள். நாம் அவற்றை அள்ள மறந்து விட்டோம்.இது போன்ற  மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் கீழே.

- உள்ளுணர்விற்கே சிறப்பு , சிறிதெனினும் இனிது 
- இந்தியா இறைப்பித்து பிடித்த நாடு, இறைப்பித்து என்பது நமக்கு நன்மதிப்பு 
- எல்லாவற்றிற்கும் மூலம் நம்பிக்கை, நம்பிக்கையில் வலிமை உள்ளது 
- பாரதத்தின் ஆன்மா தோற்கவில்லை 
- காட்சியும், நினைவும் சாதனங்கள் 
- இறைநாமம் நாவிலும்,இதயத்திலும் வேண்டும் 
- ஒவ்வொரு மூச்சிலும் இறைநாமம் வேண்டும் 
- ஜபம்,தவம்,கர்மம் அனைத்திலும் பக்தி வேண்டும் 
- ஒழுக்கத்தை விற்று செல்வம் தேட வேண்டாம் 
- உன் சிந்தனையே உன்னை நிலைநிறுத்தும் தூண் 
- அழகு கண்களையும்,ஒழுக்கம் உள்ளத்தையும் குறிக்கும் 
- காலமும்,நேரமும் யார்க்குக்காகவும் காத்திருப்பதில்லை 
- நல்ல பழமொழி எந்நேரமும் பயனளிக்கும் 
- வணங்க ஆரம்பிக்கும் போதே, வளர ஆரம்பிக்கின்றோம் 
- நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கரையைப் போக்கும் 
- இரக்கம் இல்லாதவன், இருப்பினும் கொடியவன் ஆவான் 
- அறிவு மௌனத்தைக் கற்றுத் தரும், அன்பு பேசக் கற்றுத் தரும் 
- உண்மையை சொன்னவன் , ஊருக்கு பொல்லாதவன் 
- முதுமை எல்லோருக்கும் உண்டு, அதை மதியுங்கள்.
-உளறிக் கெடுப்பவனை விட ஊமையே சிறந்தவன் 
- உண்மையான தத்துவம் என்பது விதைகள் 
- அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும் 
- ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் வரை பாயும் 
- சத்தியமே கடவுள் 
- தாய்மையின் மகத்துவம் தாய்ப்பால் 
- உண்ணாநோன்பில் உயிராற்றல் கூடும் 
- விலங்குணவு கொள்வோர் புறவினத்தார் 
- பழிவாங்கும் வன்செயலுக்கு இடங்கொடாதீர் 
- சினம் கொண்டவன் சிகரம் தொட்டதில்லை 
- கபாலபதி ஒரு மூச்சுப்பயிற்சி ஆகும் 
- இடுப்புக்குளியல் மூல நோயகற்றும் 
- உடம்பார் அழிவின்,உயிரார் அழிவர் 
- இறை எண்ணத்தில் இறைவனைக் காண்போம் 
- உயர் நெறிப்படி வாழ்வோம் 
- அன்பின் ஆற்றல் அகிலம் காக்கும் 
- எள் உருண்டை,எள் சட்டினி,முளைகட்டிய எள் உண்போம் 
- அளவான உணவே அருமை 
- அன்பே சிவம், சிவமே அன்பு 
- குழந்தையின் ஆனந்தத்தைப்  போல் மலர்வது அன்பு 
- அன்பிற்கு உரிய மதிப்பளிக்க தவறி விட்டோம் 
- அன்பை வழங்கவும்,வாங்கவும் கற்க வேண்டும் 
- அன்பே அனைவரையும் கவர் விரும்புகின்றது 
- இதுவும் கடந்து போகும் என எண்ணிக் கொள்வோம் 
- அன்பின் அணுகுண்டை உண்டாக்க வேண்டும் 
- இனியவை பேசி இணக்கம் கொள்வோம் 
- அன்பே இறைவன், இறையே அன்பு 
- மருத்துவ மனையில் ஆத்ம வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லை 
- இல்லத்தின் சேவையில் ஆத்ம வளர்ச்சி உண்டு 
- கோபமே பாவங்களுக்கெல்லாம் மூலம் 
- பொறுமை கடலினும் பெரிது 
- ஒருவன் புணர்வதல்ல விபசாரம்; மனதில் வாஞ்சை கொள்வதே அது 
- வாக்கினால் உச்சரிப்பதல்ல பூஜை;மனதில் உள்ள அன்பே பூஜை 
- ஒருவரைத் தழுவுவதல்ல ஆசை; மனதில் உள்ள பிரியமே ஆசை 
- பல வகை உறைவி ஊட்டுவதல்ல அமிர்தம்; அன்புடன் பால் ஊட்டுவதே அமிர்தம் 
- உண்மையான சாதனை இதயத்துடிப்பு தான் 
- நாம் கற்க வேண்டியது வாழ்க்கை 
- வாழ்க்கை என்றால் மௌனம்,அமைதி,அன்பு,பொறுமை 
- அன்பு - பாதுகாப்பு, பொறுமை -முன்னேற்றம் 
- உண்பது ஒரு பங்கு,குடிப்பது இரு பங்கு 
- பணிபுரிவது மூன்று பங்கு, சிரிப்பது நான்கு பங்கு 
- தோல்வி இதயத்திற்கு போகக் கூடாது 
- வெற்றி தலைக்கு போகக் கூடாது 

என்ன நட்புக்களே..மேலே சொன்ன வாக்கியம் ஒவ்வொன்றும் அமிர்தம் தானே. திரும்ப, திரும்ப படியுங்கள், படித்ததை பிடியுங்கள்.

- அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம் 

 
முந்தைய பதிவுகளுக்கு :-


 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm_29.html


 விவேகானந்தர் விஜயம் (1)  - http://tut-temple.blogspot.in/2017/12/1_27.html


 சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html 

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html

அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html


 மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_18.html


போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html

 வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html
 
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html


 

29 December 2017

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அறிவிப்பு

அன்பார்ந்த TUT தள வாசகர்களே. 

இதோ 2017 ஆம் ஆண்டின் நிறைவில் இருக்கின்றோம். பிறக்கும் 2018 ஆம் ஆண்டு அனைவருக்கும் நலத்தையும், வளத்தையும் கொடுக்க நாம் பிரார்த்திக்கின்றோம். இந்த ஆண்டில் அகத்தியர் வனம் மலேஷியா குழுவுடன் இணைந்து கடந்த 6 மாதங்களாக அன்னசேவை செய்து வருகின்றோம். TUT தளத்தின் ஆரம்பமே அன்னதானம் தான். சுமார் 10 -15 எலுமிச்சை சாத பொட்டலங்கள் தயாரித்து, நண்பர் திரு.தமிழ்மணியின் வீட்டில் , கர்த்தரிடம் பிரார்த்தனை செய்து ஆரம்பித்த தொண்டு, இன்று மற்ற குழுக்களின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றது. பிள்ளையார் சுழி இட்டு துவக்கி வைத்து, நம்முடன் இணைந்து பயணித்து வரும் திரு.தமிழ்மணி  மற்றும் அவர் தம் அன்பு குடும்பத்தார்க்கு நன்றியைத் தெரிவிப்பதில் TUT குழு மகிழ்ச்சி கொள்கின்றது.

 இதே போல், முதலில் கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் மட்டுமே செய்து கொண்டிருந்த அன்னசேவை, இதோ அகத்தியர் வனம் மலேஷியா குழு இணைந்தமையால் வேளச்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் செய்து வருகின்றோம். சென்ற அன்னதானம் சைதாப்பேட்டை பகுதிகளில் நடைபெற்றது. இதனைப் பார்க்கும் போது உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற வாக்கியம் நினைவிற்கு வருகின்றது. குருவின் ஆசியினால், வருகின்ற 2018 ஜனவரி மாத அன்னதானம் திருஅண்ணாமலையில் உள்ள சாதுக்களுக்கு வழங்கும்படி நிகழ்வு உறுதியாகி உள்ளது. 2018 ஆரம்பமே அசத்தலோடும், அட்டகாசத்தோடும் TUT ஆரம்பிக்க உள்ளது. இந்த திருஅண்ணாமலை அன்னதானம் செய்ய நாம், மிகப் பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அன்னதானம் பற்றி சில சிந்தனைகள் செய்து விட்டு, அறிவிப்பை இறுதியில் வெளியிடுகின்றோம்.

 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே... என்று கேட்டிருக்கின்றோம்.இது எங்கே உள்ளது ?


ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!
நூல்: மணிமேகலை
பாடியவர்: சீத்தலைச் சாத்தனார்
சூழல்: பாத்திரம் பெற்ற காதை : வற்றாமல் உணவை அள்ளித் தருகிற அமுதசுரபி என்கிற பாத்திரத்தை மணிமேகலை பெறுகின்ற அத்தியாயம் இது. அப்போது அவளிடம் தீவதிலகை என்ற பெண் சொன்ன வார்த்தைகள் இவை
மணிமேகலையே,
பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி.
அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம்.
ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு!
 இவற்றைப் படிக்கும் போது, மணிமேகலை,சிலப்பதிகாரம் போன்ற ஐம்பெருங்காப்பியங்கள் படிக்கத் தோன்றுகின்றது. இதோ சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி உங்களுக்காக - ஆக்கத்தில் உதவி - தமிழ் பிராமிண் இணைய தளம்.

மணிமேகலை காப்பியம் படைத்த புலவரே, பசி வந்திட மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமுறுதல் ஆகிய பத்தும் பறந்துபோகும் என்று அவ்வையார் கூறுகிறாரே!
குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;
பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;
நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்;
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)


 
அட,உங்கள் கருத்தும் அதுதானா ! சோழ மன்னன் காந்தமன் வேண்டியதால் அகத்தியர் தனது தண்ணீர் கலசத்தைக் கவிழ்க்கவும் காவிரி உற்பத்தியானதாமே!
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை (மணி. பதிகம் 11-10)
 
காவிரி நதி ஜீவ நதியா?
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை

 
அறம் அல்லது தர்மம் என்றால் என்ன, புலவரே?
அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல் (மணி 25-228)

 

Food, Shelter and clothing are three essential things என்று இன்று எல்லோரும் சொல்லுவதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன பேரறிஞரே, பரசுராமனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று காந்தன் என்னும் சோழனை அகத்தியர் ஒளிந்துகொள்ளச் சொன்னாரா?
மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்
தன் முன் தோன்றற்காதொளி நீ யெனக்
கன்னி ஏவலிற் காந்த மன்னவன்
அமர முனிவன் அகத்தியன் ரனாது
துயர் நீங்கு கிளவியின் யாறேன் றறவும் 11-25
   
உங்கள் காலத்தில் யவனர்களும் தமிழர்களுடன் வேலை செய்தார்களா?
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி





 
செல்வத்தின் பயனே ஈதல் என்று புலவர்கள் கூறுகின்றனரே? அதிலும் தானத்தில் சிறந்தது அன்ன தானமா?
ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)
 

அருமையான வாசகம். சரியான அரசன் இல்லாவிடில் நாட்டில் என்ன நடக்கும்?
கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்
மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை
மன் உயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக (மணி 7-8)
 
தொல்காப்பியர் ஆறு அறிவு படைத்த மனிதன் பற்றிக் கூறுகிறார். நீங்களும் உயிர்களை ஆறு வகையாகப் பிரித்திருக்கிறீர்களா?
பல்லுயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் நரகரும் பிரமரும்
தொக்க விலங்கும் பேயுமென்றே (30-56)

 
கோவலன் கொலையுண்டவுடன் மாதவியை அறவண அடிகள் எப்படித் தேற்றினார்?
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் உறுவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக (2-64)

 
அகத்திய முனிவன் வேண்டியதால் சோழ மன்னன் 28 நாள் இந்திர விழாவை பூம்புகாரில் ஏற்பாடு செய்தது உண்மைதானா?
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
விண்ணகர் தலைவனை வணங்கி முன்னின்று
மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோளெடுத்த
நாலேழ் நாளினும் நீன்கனி துறைகே
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது (மணி 1.11-39

 
அமுத சுரபி என்னும் அற்புத கலசத்தால் ஏழை எளியவர்களுக்கு உணவளித்த மணிமேகலை யார் யாருக்கு உணவு கொடுத்தாள்?
காணார், கேளார், கால் முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்துடன் ஊட்டி (மணி 13-111)
அற்புதம், அற்புதம் ! 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சமூக சேவை என்ன என்பதை தமிழன் தான் உலகுக்கே கற்பித்தான் போலும்!
  

அப்பப்பா..நம்  கலாச்சாரம் என்பது அறிவியலும் உளவியலும் ஞானமும் கலந்த ஒன்றாகும். அதை புறக்கணித்து விட்டு பிற கலாசாரத்தை போற்றி புகழ்வது அறிவுடைமையாகாது என்றே நமக்குத் தோன்றுகின்றது.




மெய் அன்பர்களே.

அகத்தியர்வனம் மலேஷியா மற்றும் TUT( தேடல் உள்ள தேனீக்களாய்) இணைந்து  வருகின்ற 1/1/2018 திங்கள் கிழமை அன்று காலை  சுமார் 7 மணி அளவிலும் & மாலை சுமார் 6 மணி அளவிலும்   திருவண்ணாமலையில்  உள்ள ஸ்ரீ தயவு சித்த ஆஸ்ரமத்தில், ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் மூலம் 
சாதுக்களுக்கு  அன்னதானம் செய்ய இறையருளும்,குருவருளும் கூட்டியுள்ளது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அன்னதானத்தில் உதவும்படி வேண்டுகின்றோம்.

இவண்,

அகத்தியர்வனம் மலேஷியா - http://agathiyarvanam.blogspot.in/
தேடல் உள்ள தேனீக்களாய் - tut-temple.blogspot.in


முந்தைய பதிவுகளுக்கு :-



 விவேகானந்தர் விஜயம் (1)  - http://tut-temple.blogspot.in/2017/12/1_27.html



 சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html 

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html


அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html


 மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_18.html


போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html

 வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html
 
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html