Subscribe

BREAKING NEWS

30 November 2017

மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (3)


மணப் பொருத்தம் என்ற தொடர் பதிவில் இரண்டு பதிவுகளை நாம் பதிவிட்டோம். இல்லறமாகிய நல்லறம் சிறக்க நாம் திருமணம் என்ற உறவை பார்க்கும் கோணத்தை மாற்ற வேண்டும். அதற்கு இந்த தொடர் பதிவு உதவும் என்று நம்புகின்றோம். முந்தைய பதிவுகளில் மனைவி நல வேட்பு நாள் என்பது பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் அறிந்து இருப்போம். மனைவி நல வேட்பு நாளை ஆகஸ்ட் மாதம்தான் கொண்டாட வேண்டும் என்று அவசியமில்லை. அப்படியென்றால் கணவனுக்கு? என்றொரு நாள் வேண்டாமா? என்று நினையாது, வாழ்க்கைத்துணை ஒருவரையொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்து பாருங்கள். பின்னர் என்ன ..மணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தமாக அமையும். பின்னர் இல்லறம் நல்லறமாகவும் இருக்கும். இந்த பதிவில் இவை பற்றி மேலும் சிந்திக்க இருக்கின்றோம்.


இனிக்கும் இல்லறம் அமைத்திட வேண்டுமா? முதலில் நாம் ஏற்கனவே சொல்லியவாறு திருமண விழாவினை அருள் விழாவாக மாற்றுங்கள். இது ஒன்றும் அடிமாட்டு சந்தை அல்ல. இங்கே இரு மனங்கள் இணைகின்றன. இந்த ஆரம்பம் தான் வாழ்வின் எல்லை வரை நீடிக்க இருக்கின்றது. பெற்றோர்கள் தயை கூர்ந்து இதைப் பற்றி யோசியுங்கள்.


வாழ்க்கைத் துணை ஒவ்வொருவரும் மற்றவரை புரிந்து, அவர் திறமையை ஊக்குவித்து, கவலையில் ஆறுதல் அளித்து, குறை பொறுத்து, முயற்சியில் ஒத்துழைத்து , கோபத்தில் அமைதி காத்து, அன்பு பாராட்டி வாழ வேண்டும். இது தான் இனிக்கும் இல்லறம் அமைய அடிப்படையான கோட்பாடு. இதனை அனைவரும் மறந்து விடுவதால் தான் இன்பம் கொடுக்கின்ற குடும்பத்தில் பல பிரச்சினைகள்.







வாழ்க்கைத்துணை ஒவ்வொருவரும், மற்றவரை மனதார விரும்ப வேண்டும். முழுமையாக நம்ப வேண்டும்.


இது மிக மிக முக்கியமான ஒன்று. கணவன் மனைவி இருவரின் ரசனையும் ஒரே மாதிரி இருக்கும் என்று நாம் நினைக்க வேண்டாம். ஒவ்வொருவரின் சுபாவம், வளர்ப்பு, அகம் பொறுத்து இது மாறுபடும். நல்லறம் காக்க, ஒருவர் ரசனையில் மற்றொருவர் குறுக்கிடாது வாழ வேண்டும். 

அடுத்த படியாக செல்வம். செல்வம் பெரிது தான். அந்த செல்வத்தை விடப் பெரிது மனநிம்மதி. அந்த மனநிம்மதியை கணவனும் மனைவியும் மாறி மாறி கொடுத்து பழக வேண்டும்.

இந்த உலகில், பெற்றோருக்கு அடுத்தபடி ஆறுதல் தருகின்ற உறவு, அன்பு தருகின்ற உறவு, காத்து ரட்சிக்கும் உறவு என்றால்  அது கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் தான். இந்த உறவு பட்டுப் போகாமல் நாள்தோறும் தழைக்க வேண்டும்.

வெளியுலக வாழ்க்கை வேறு. அதாவது பொருள் சம்பாதிப்பது போன்றது. குடும்ப வாழ்க்கை வேறு. இது அன்பும் ,அருளும் சம்பாதித்து செலவழிப்பது. இரண்டையும் தனித்தனியே வைத்துக் கொள்ள பழக வேண்டும். வெளியுலக வாழ்க்கையில் உள்ள சிந்தனைகளை, சிக்கல்களை, கவலைகளை வீட்டுக்குள் சென்று குடும்ப வாழ்க்கையில் நுழைக்காதீர்கள். எப்படி வேலை முடித்து வீட்டுக்குள் செல்லும் போது, காலணியை கழற்றி வீட்டுக்கு வெளியே வைக்கின்றோமோ, அதே போல வெளியுலக வாழ்க்கை ,அது சார்ந்த விஷயங்களையும் வெளியிலேயே வைத்து விடுங்கள். இது தான் இன்று பல குடும்பங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு காரணம். ஒரே நாளில் பழக்கத்திற்கு வராது . கொஞ்சம் கொஞ்சமாக பழகி முயற்சி செய்யுங்கள்.

ஒரு கை தட்டி ஓசை எழுப்ப முடியுமா? இரண்டு கைகளும் இணைத்து தட்டினால் தான் ஓசை வரும். ஒருவர் உணர்ச்சிவசப்பட்டால் ,மற்றவர் அமைதி காத்து பழக வேண்டும். கணவன் என்று கையும், மனைவி என்ற மற்றொரு கையும் சேர்ந்து தட்டுங்கள். வாழ்தல் புரியும், அறம் தலைக்கும், இல்லறம் செழிக்கும்.

கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். தவறில்லை, இது எல்லா குடும்பங்களிலும் தவிர்க்க முடியாதது. இந்த கருத்து வேறுபாடுகள் பெரிதாக வளரக் கூடாது, வீட்டின் நாள் சுவர் தவிர்த்து வெளியேயும் வரக் கூடாது. இந்த கருத்து வேறுபாடுகள் சுமார் ஒன்றிரண்டு நாட்களில் சரி செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் தொடர விடாது இருக்க வாழ்க்கைத்துணை ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.

விளையாட்டுக்குக் கூட உங்கள் வாழ்க்கைத் துணையை நக்கல் செய்வதோ, ஏளனமாக பேசுவதோ கூடாது. இதனால் வரும் மனக் காயம் ஆறவே ஆறாது.

சுருக்கமாக சொல்வதென்றால் கணவன்,மனைவி என இருவரும் வெல்வதே வாழ்க்கை விளையாட்டு. ஆனால் கணவன் தான் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்றோ, மனைவி தான் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவதோ இல்லறமும் அல்ல, நல்லறமும் அல்ல.


கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...? என்று சில டிப்ஸ்களை இங்கே பட்டியல் செய்துள்ளோம். நீங்களே உங்களை எடை போட்டுப் பாருங்கள், எங்கே சரி செய்ய வேண்டுமோ, அங்கே சரி செய்யுங்கள். பின்னர் என்ன? வாழ்க்கை வாழ்வதற்கே.


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.


2. மனது புண்படும்படி பேசக்கூடாது.


3. கோபப்படக்கூடாது.


4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.


6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.


7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.


8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.


9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.


10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.


11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.


12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.


13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.


14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.


15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.


16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.


17. ஒளிவு, மறைவு கூடாது.


18. மனைவியை நம்ப வேண்டும்.


19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.


20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.


21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.


22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.


23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.


24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.


25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.


26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று 

ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்

 மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.


- மீண்டும் அடுத்த பதிவில் மனம் விட்டுப் பேசுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-



 மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/2.html

 மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/08/1.html

மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_4.html

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள்வோமா? - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_2.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post.html

தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா? - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_51.html

இவ்வளவுதங்க குடும்பம்...! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_98.html

நட்பின் வலிமை - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_55.html

ஆழ்மனத்தின் ஆற்றல் - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_17.html

உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_6.html

கடவுளை காட்டுங்க! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_24.html

சில நேரங்களில் சில மனிதர்கள்... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_14.html

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_13.html

கண்ணனுக்கு சொன்ன கதை - http://tut-temple.blogspot.in/2017/04/kannanukku-sona-kathai.html



29 November 2017

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து

------------------------------------------------------------------------------------------------------------------------

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந்தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.      

- திருஞானசம்பந்தர்

பொருள் :

  திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவ வேடம் தாங்கியவர்களும் பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடி வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடிகளை நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.
------------------------------------------------------------------------------------------------------------------------

நன்று என்பது எது? அதுவும் நாம் வாழ்கின்ற இந்த காலத்தில் நன்று என்பது மிக மிக தேவையான ஒன்று. நன்று என்பது நல்லது,சிறப்பு,பெரிது,அறம்,இன்பம்,நல்வினை,உபகாரம்,வாழ்வின் நோக்கம் என்று பல சொற்களின் மூலம் பயன்பட்டு வருகின்றது. தமிழ் மொழியில் பல செய்திகள் நன்றைப் பற்றி நாம் அறிய முடியும்.



நன்றே செய்க அதுவும் இன்றே செய்க

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
என்று நம் ஒளவையார் பாட்டி சொல்லி இருக்கின்றார்கள். அதிலும் சர்வேஸ்வரனும், பார்வதி அம்மையாரும் நன்று எது என்று கேட்க,


"ஆலயம் தொழுவது சாலவும் நன்று!" என்று கூறி உள்ளார்கள். அப்படியானால் நல்லாரைக் காண்பதுவும் நன்றே என்பதுவும் நன்றே. இதில் எதை நாம் முதலில் கடைபிடிப்பது? ஆலயம் தொழுவதைத் தான். ஏனெனில் ஆலயம் தொழ,தொழத் தான் நம்மிடம் உள்ள தீய குணங்கள் வெளியேறி, நன்மதிப்பைப் பெறுவோம். நன்மதிப்பும், நற்சிந்தனையும் கிடைத்துவிட்டால்.. வேறென்ன ? நல்லாரைக் காண முடியும், நல்லார் மொழி கேட்க முடியும். ஆலயம் தொழுவது என்பது ஒரு கட்டடத்தின் அடித்தளம் மாதிரி. அடித்தளம் நன்கு அமைந்து விட்டால், எப்போதும் துன்பம் வராது. துன்பம் வந்தாலும் நம்மால் சற்று சமாளிக்க முடியும்.

இப்போது நம்முள் நிலைநிறுத்த வேண்டிய செய்தி " ஆலயம் தொழுவது தான் "



ஆலயங்களுக்கு செல்வது அதுவும் புராதன ஆலயங்களுக்கு செல்வது என்பது நமக்கு கவசம் போன்றது. புராதன ஆலயங்களில் நம் முன்னோர் சென்று வழிபட்டு இருக்கின்றார்கள். அது போன்ற தலங்களில் சற்று உருகி வேண்டிட, நமக்கு சில செய்திகள் கண்கூடாக உணர்த்தப் படுவதுண்டு.இதே போல் தான் குலா தெய்வ வழிபாடும். குல தெய்வம் என்றால் என்ன? என்று தெரியாமல் வாழும் நிலைக்கு நாம் மெதுவாக தள்ளப்பட்டு வருகின்றோம். வாழ்வில் எப்பேர்ப்பட்ட துன்பம்,கஷ்டம் இருந்தாலும் குல தெய்வ வழிபாட்டை ஆத்மார்த்தமாக செய்து பாருங்கள். நிச்சயம் விடியல் உறுதி,

நம் நாக்கு எப்படி செயல்படுகின்றது ? 32 பற்களுக்கு இடையில் தான் நாக்கு உள்ளது. ஆனால் நாம் நம் நாக்கை கடிக்கின்றோமா? உண்ணும் போதும் நாம் நாக்கை கடிப்பதில்லை, அது போல் தான் இந்த வாழ்க்கையும், நாக்கு எப்படி லாவகமாக உள்ளதோ, அதே போல், பிரச்சினை,சிக்கல் என நம் வாழ்வு இருந்தாலும் இறைவனின் திருவருள் கொண்டு நாம் பிடிபடாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். மனித வாழ்க்கை நிலையற்றது, இப்படித் தான் எனது வாழ்க்கை இருக்கும் என்று நாம் கனவு தான் காண முடியுமே தவிர, நடப்பதெல்லாம் அவனின் கையில் தான் உள்ளது. இந்த உண்மையை உணர, அன்றாடம் செய்தித்தாள் பாருங்கள். உண்மை புரியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் எந்த வித துன்பங்களும் நேராது, நாமும் நமது லட்சியப் பயணத்தில் வெற்றி நடை போட்டு நிம்மதியுடனும் சந்தோஷமுடனும் வாழ ஆலய தரிசனம் என்னும் ஆன்ம தரிசனம்  முக்கியம் எனபது புரிகின்றதா?



கடவுள் எங்கும் இருக்கின்றார்.எதிலும் இருக்கின்றார் எனும் போது நாம் ஏன் ஆலயம் சென்று தொழ வேண்டும் என்று சிலர் கேட்கும் கேள்வி நமக்குக் கேட்கின்றது. பூமிக்கடியில் தண்ணீர் எங்கும் உள்ளது, நாம் ஏன் ஆழ்துளை இட்டு, குழாய் மூலம் ஏற்றி, TANKல் சேமிக்கின்றோம். நமக்கு அவசரத்திற்கு தேவைப்படும் போது, குழாயைத் திறந்தால், தண்ணீர் வர வேண்டும் என்ற நிலைக்குத் தான். அதே போல் தான் இறைவன் எங்கும் நிறைந்து இருந்தாலும், அவனின் இருப்பை TANK ல் சேமிப்பது போன்று, ஆலயங்களில் சேமித்து வைத்து உள்ளார்கள். நமக்கு எப்போது நீர் தேவையோ அப்போது குழாயைத் திறப்பது போல, நாமும் ஆலயம் என்று அவர் இருப்பிலிருந்து அவர் அருளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் ஆலயம் சென்று நாம் என்ன கேட்க வேண்டும்? என்று நமக்குத் தெரிவதில்லை. அதற்கு முன்பாக, நாம் புராதன,தொன்மை வாய்ந்த ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னோம்,
இன்று எங்கு பார்த்தாலும் புதிது புதிதாக பல ஆலயங்கள் உருவாக்கி, ஆன்மிகத்தை விற்று வருகின்றார்கள். உதாரணமாக திருஅண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது, எட்டு லிங்கங்கள், சில ஆசிரமங்கள் உண்டு. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி, பல ஆலயங்கள் முளைவிட்டு வளர்ந்து வருகின்றது. மாணிக்கவாசகர் வந்து பாடிய கோயிலும் அங்கே தான் உள்ளது. ஆனால் யாரும் அங்கே செல்வது இல்லை, புதிதாக முளைத்துள்ள கோயில்களில் பார்த்தால்  கூட்டம் அலைமோதுகின்றது. இனிமேலாவது இது போன்று செய்யாதீர்கள், புராதன,தொன்மை வாய்ந்த ஆலயங்களுக்கு செல்லுங்கள். சரி ..மீண்டும் நாம் விசயத்திற்கு வருவோம்.

வேண்டும் போது நாம் குழாயைத் திறந்து நீரைப் பெறுவது போல, ஆலயங்களுக்கு சென்று நாம் வேண்டும் போது  திருவருள் பெற வேண்டும்.இறைவன் நிச்சயம் நாம கேட்கும்போது கேட்குறதை கொடுக்குறவன் தான். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்று அதனால் தானே திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். ஆனால் நாம் கேட்பது கிடைக்கவில்லை என்றால் ஒன்று நாம் தவறாக கேட்டிருக்கின்றோம் அல்லது நாம் கேட்பதற்கான தகுதியை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. இரண்டில் ஏதோ ஒன்று தான். இரண்டையும் நாம் சரி செய்ய வேண்டும் என்றால், தினந்தோறும் கோயிலுக்கு சென்று நம்மை நாம் சரி செய்ய வேண்டும். நிறையே பேருக்கு தங்களுக்கு ஒரு தேவை அல்லது பிரச்னைன்னு வரும்போது தான் கடவுளோட ஞாபகமே வருது. மனுஷங்ககிட்டே தான் தேவை அறிந்து பழகுகிறோம் என்றால் கடவுளிடமுமா?



இப்போது எல்லாம் ATM கார்டை உள்ளே சொருகி, பணம் எடுத்து வருகின்றோம். வங்கியில் பணம் இல்லை என்றால், எத்துனை முறை ATM கார்டை சொருகினாலும், பணம் வராது. ஒரு அவசரத் தேவை என்று வைத்துக் கொள்வோம். அக்கம் பக்கம் கடன் வாங்கி சமாளித்து விடலாம். ஆனால் திருவருள் அப்படி ATM கார்டுகளில் கிடைக்கின்ற விஷயமா? இல்லை வேறு யாரிடமாவது அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி தான் பெற இயலுமா? ஹ்ம்ம் ..முடியவே முடியாது. அவராக பார்த்துத் தந்தால்  தான் உண்டு. அவன் அருளை பெற, ஆலய தரிசனம் வேண்டாமா?

ஆலய தரிசனம் போன்று உழவாரம்,அன்னதானம் எனபது போன்ற புண்ணிய காரியங்களின் வாயிலாகவும்  இறைவனின் திருவருளை சேமித்து வர வேண்டும். அப்ப்போது தான் அதை தக்க சமயத்தில் உபயோகிக்க முடியும்.கோயிலுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை இங்கே பார்த்தோம். ஆனால் பலர் பாவ காரியங்களை செய்து கொண்டு கொஞ்சம் கூட அஞ்சாது கோயிலுக்கு வருகின்றார்கள். அதைப் பற்றி கவலைப்படுவதை விடுத்தது, நாம் என்ன செய்கின்றோம் என்று சிந்தியுங்கள், நீங்கள் ஒரு போதும், இது போன்ற பாவத்தை செய்ய வேண்டாம். செய்து விட்ட காரியங்களுக்கு ஆலயம் சென்று ஆன்ம லயம் கொண்டு மன்னிப்பு கோருங்கள். காலத்தால் தீமை மறையும்.


(பாப காரியங்கள் எவை எவை? கீழ்கண்ட பதிவை பார்க்க)

http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_17.html

சரி . கோவிலுக்கு செல்வது என்று முடிவு செய்து விட்டோம் . எந்த நாள் எப்போது செல்வது?



தினசரி கோவிலுக்கு செல்வது நன்று. அப்படி தினசரி முடியாதவர்கள் வாரம் ஒரு முறை செல்வது நல்லது. தங்கள் ராசி நட்சத்திர பலன்களுக்கு ஏற்ப வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சென்று வருவது இன்னும்  சிறப்பு.

அல்லது தங்களுக்கு இயன்ற நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வருவது சிறப்பு. வாரம் ஒரு முறை தனியாகவும், மாதம் ஒரு முறை குடும்பத்துடனும் சென்று வருவதை வழக்கமாக கொள்ளலாம்.

சென்னையில் உள்ள நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். சென்னை என்றாலே பரபரப்பு தான் நினைவிற்கு வரும். இந்த பரபரப்பையும் தாண்டி, சென்னை இன்னும் தன்னை புதுப்பித்து கொண்டு வருவது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆலயங்கள் தான். கடந்த இரண்டு ஆண்டுகளிலும் நாம் இயற்கை சீற்றத்தை அனுபவித்தோம். ஆனால் நம்மால் உடனே உயிர்த்தெழ முடிகின்றது என்றால் அவற்றிக்கு காரணம் சென்னையில் உள்ள தொன்மை வாய்ந்த ஆலயங்களும்,சித்தர்களின் ஆசிகளும் அன்றி வேறில்லை. என்னப்பா?  அந்த தொன்மை, பழமை ஆலயம் என்று நினைக்கின்றீர்களா?

இதோ திருவொற்றியூர் ஒற்றீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர், திருவேற்காடு வேதபுரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருநின்றவூர் இருதயாலீஸ்வரர், திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள்,  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில், என்று பல புராதன ஆலயங்கள் உண்டு. இது போல் நமக்கு காணக் கிடைக்காத ஆலயங்கள் நம் வீட்டின் அருகில் கூட இருக்கலாம். உதாரணத்திற்கு குன்றத்தூரில் சேக்கிழார் வழிபட்ட கந்தலீஸ்வரர் ஆலயம்.

சரி மேற்கண்ட ஆலயங்களுக்கு மாதம் ஒருமுறையாவது செல்லுங்கள், அந்த கருவறையின் வாசத்தில், தீப எண்ணையின் ஆற்றலில் ஆன்மாவை சுத்தி செய்யுங்கள்





- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


முந்தைய பதிவுகளுக்கு :-

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html 

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html


28 November 2017

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2)

கிரிவலம் என்ற ஒற்றைச் சொல்லுக்குத்தான் எத்தனை மகிமைகள்! கிரி என்றால் மலை,
வலம் என்ற சொல்லுக்கு உங்களுக்கே பொருள் தெரியும். மலையையைச் சுற்றி வலம் வருவது தான்
கிரிவலம். பொதுவாக கிரிவலம்  என்று சொன்னாலே அனைவருக்கும் திருஅண்ணாமலை என்று
தான் நினைவிற்கு வரும், ஒவ்வொரு தமிழ் மாத அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில்
திருஅண்ணாமலை கிரிவலம் பிரசித்தி பெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்று நாம் கிரிவலம் பற்றியும், திருஅண்ணாமலை பற்றியும் அறிய உள்ளோம்.





திருஅண்ணாமலை ஒரு வரலாறு முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை
வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சியளிக்கிறார். இது ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் பிரகாரங்களில்
 உள்ள கற்களில் பல முக்கிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் பல நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன. மேலும் இக்கோயில் மற்றும் ஸ்தலத்தை பற்றிய விவரங்கள்
இங்கு கிடைத்த   செப்பு தகடுகளால்  கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையின் புகழை மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
மற்றும் சம்பந்தர் ஆகியவர்கள் அவர்கள் இயற்றிய கவிகள் முலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
தமிழ் இலக்கியங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் இதனை வெளிக்காட்டுகிறது.
அருணாச்சலேஸ்வரரை பற்றியும் திருவண்ணாமலையை பற்றியும் அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள் முலம் சிறப்பாக உரைத்துள்ளார். இப்படைப்புகளை வாசித்த சோழ மன்னர்கள் மிகவும் பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல உதவிகளை செய்துள்ளனர். மேலும் கடவுள் அருணாச்சலேஸ்வரர் மகிமை
மீது மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளனர். சோழ மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள்,
கோயிலை சேர்ந்த கட்டிடங்கள் கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக கோயில் முன்னேற்றம்
அடைய உதவியுள்ளனர்.



மேலும் விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார். இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது. இவர் அண்ணாமலையாரின் தீவிர பக்தராக விளங்கினார். இக்கோபுரமானது இந்தியாவின் உயரத்தில்
இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில்
 கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான  பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார். இவர் செய்த உதவியை சிவனடியார்
 பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு
வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.


சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம்.
ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில்,
சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும்,
பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார்.
இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா
 ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை.
இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக
உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.




திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக
பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது.
பல மன்னர்களின் முயற்சியால் நன்கு வளர்ந்து இன்று புகழுடன் விளங்குகிறது. மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் கவிதைகள்
மூலம் பாராட்டுகளைப்  பெற்ற ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. உலகை உருவாக்கிய மற்ற நான்கு பூதங்கள் நீர், வாயு, ஆகாயம், மற்றும் பூமி. இந்த அழகிய சிவனடியார்களின் கோயில்
அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை அடிவாரத்தில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயிலை சென்றடைய காட்பாடி [ வேலூர் ]. ரயில் நிலையத்திலிருந்து சுமார் 80 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 180கி.மீ தொலைவில் உள்ளது. சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார். சிவனை அசைக்க முடியாத மலை என நம்புவதால்
 பக்தர்கள் சிவனடியாரை அண்ணாமலையார் என்றும் பெயர் சூட்டி வழிபடுகின்றனர்.
 அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும்
கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.
 கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது.
ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும்
 அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெறும்  என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை.



தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான
 உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும்,
திரேதா யுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது
இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது.அருணாச்சலேஸ்வரர்
கோயிலில்  அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு 
திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு
திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம்  என்று அழைக்கப்படுகிறது.
இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்க்கை  அமைய வழி
செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்த லிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.
சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும்
பெருத்த செல்வமும் வழங்கும்.



கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில்
இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள்
 நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம்
 சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது.
 இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது, யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு
 உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை
வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும்.
இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக
பிரச்னைகளின்றி வாழலாம்.



கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு.
மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம்
சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும்
கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம்
கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல் , மற்றும் பொதுவாக
வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம்
குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த
லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய
வேண்டும்.

கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம்
ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு
திகழ்வார்கள்.

அடுத்து கிரிவலம் செல்வதற்கான சில யோசனைகளை இங்கே அறியலாம். நம்மைப் பொறுத்தவரை அந்த எஜமானின் ஏகாந்த நிலை உணர, பௌர்ணமி அல்லாது மற்றைய தினங்களில் கிரிவலம் செல்வது நன்று.
இப்போதெல்லாம் ஏனோ,தானோ என்று தான் செல்கின்றார்கள், அங்கே வந்து கொண்டு தொலைக்காட்சி
சீரியல்கள் போன்ற தேவையில்லாத செய்திகள் பேசிக்கொண்டு தான் கிரிவலம் வருகின்றார்கள்.ஆனால்
கிரிவலத்தின் நோக்கம் இது அன்று. மனதில் சிவ சிவ என்று நமக்குத் தெரிந்த சிவா மந்திரத்தையோ அல்லது
இறை நாமத்தையோ ஜெபித்துக் கொண்டு செல்ல வேண்டும். திருஅண்ணாமலை ..வார்த்தைகளில் அடங்கா
ஆன்மிக பூமி. எப்போதும், யாராவது இங்கே கிரிவலம் வந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பது
திருஅண்ணாமலையில் தனிச்சிறப்பு.




கிரிவலம் செல்பவர்களுக்கு சில யோசனைகள் :-

  • பாதணிகள் இல்லாமல் செல்வது பொருத்தமாகும்.
  • கிரிவலம் வரும்போது மலையின் உச்சியை நோக்கியே வலம் வருவது மிகவும் நல்லது.
  • கிரிவலம் பௌர்ணமி தினமும் அல்லது இரவில்,அமாவாசை, மாத சிவராத்திரி அன்று செல்லலாம்.
  • கிரிவலம் செல்பவர்கள் “ஓம் அருணாச்சல” என சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.
  • கிரிவலம் வரும்போது எக்காரணத்தைக் கொண்டும் தீய வார்த்தைகளைப் பேசக்கூடாது. 
  • எந்த இடத்திலிருந்து தொடர்ந்தோமோ அதே இடத்தில் முடித்தால்தான் கிரிவலம் முழுமை பெறும் என்கிறது, அருணாசல புராணம். 
  • சித்திரை மாத பௌர்ணமியன்று அண்ணாமலையாரின் கிழக்கு கோபுரத்தின் முன் பசுநெய்யிட்டு, தாமரைத் தண்டு திரியினால் அகல் விளக்கு ஏற்றி அதை உயர்த்திப் பிடித்து தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து, பிறகு கிரிவலம் தொடங்க வேண்டும். பிறகு பூதநாராயணர் ஆலயத்தில் பூக்களை தானமளித்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
  • கிழக்கு கோபுர வாயிற்படியில் அருளும் லட்சண விநாயகரை சம்பங்கிப் பூக்களால் அர்ச்சித்து வணங்கி பின் அண்ணாமலையாரை  தரிசிக்க வேண்டும். இதற்கு லட்சண திருமுக தரிசனம் எனப் பெயர். அதன் பின் மகாலட்சுமி காயத்ரி மந்திரத்தை ஜபித்தவாறே கிரிவலம் வந்தால்  செல்வ வளம் பெருகும்.
  • எமலிங்கத்தின் அருகே இருக்கும் எமதீர்த்தத்தில் நீராட வேண்டும். முடியாதவர்கள் அத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு, சம்பங்கிப் பூக்களால் அர்ச்சித்து அதை பிரசாதமாகப் பெற்று எமலிங்கத்தின் வாயிலில் நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு ஔதும்பர தரிசனம் என்று பெயர். இது நீடித்த ஆயுளைத் தரும். 
  • கிரிவலப் பாதையில் செங்கம் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இது பரஞ்ஜோதி  தரிசனம் என அழைக்கப்படுகிறது. 
  • குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதனை வைவஸ்வதலிங்கமுக தரிசனம் என்பார்கள்.  
  • பூதநாராயணப் பெருமாளை தரிசித்து நம் பொருளாதார பிரச்னைகளுக்கு அவரிடம் பிரார்த்தனை செலுத்தி பின் அண்ணாமலையை  தரிசிக்க வேண்டும். இது சத்தியநாராயண தரிசனம் எனப்படுகிறது. 
  • கிரிவலம் வரும்போது மிகவும் மெல்ல நடக்க வேண்டும். இறை சிந்தனையோடும் நாம ஜபத்தோடும் நடக்க வேண்டும். 
  • கிரிவலத்தின் போது ஒவ்வொரு திக்கிலும் தியானித்து, கைகூப்பித் துதித்து, ஒரு நிறைமாத கர்ப்பிணி எவ்வளவு நிதானமாக நடப் பாளோ அவ்வளவு மெதுவாக, வைக்கும் காலடி சத்தம் கேட்காதபடி நடக்க வேண்டும். 
  • நீராடி, மடித்துணி உடுத்தி, விபூதி-ருத்ராட்சம் தரித்து கிரி பிரதட்சிணம் செய்ய வேண்டும். அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக்கு அணி யலாம்.       
  • நீர் அருந்துவதைத் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது. 
  • பாதணிகள் அணியாமல் அண்ணாமலையை வலம் வர வேண்டும்.
  • பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அண்ணாமலையாரை அர்ச்சித்து மௌனமாக கிரிப்பிரதட்சிணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்  பாவங்கள் பறந்தோடும்.
  • கிரக பீடைகள் நீங்க விரும்புவோர் சனிக்கிழமையில் அண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் வாகனத்தில் அமர்ந்து கிரிப் பிரதட்சிணம் செய்யக்கூடவே கூடாது.  
  • நிலைத்த இளமை வேண்டுவோர் கிரிவலம் வந்து உண்ணாமுலையம்மனை தரிசித்தல் வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. 
  • மற்ற தலங்களில் தவமிருந்தால் முக்தி கிட்டும்; இங்கோ, நினைத்த மாத்திரத்திலேயே முக்தி கிட்டும். எனவே முடிந்த போதெல்லாம் அருணாசல மலையை தியானிக்க வேண்டும். 
  • உலகில் எவ்வளவு தவங்கள் உண்டோ அவ்வளவு தவங்களின் பலனையும் கிரிப்பிரதட்சிணம் ஒன்றே தரும் என்பதால் ஆழ்ந்த நம்பிக்கையோடு கிரிவலம் வரவேண்டும். 




இது மட்டுமா? இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இந்த புண்ணிய பூமியில் உண்டு, ரமணர் ஆசிரமம்,
சேஷாத்திரி, விசிறி சாமியார் என பார் புகழும் பாரத மகான்களை இங்கே தரிசிக்கலாம். சித்தர்கள்
அருளும் சித்தாந்த உலகம் இன்னும் அங்கே உண்டு. இனிவரும் பதிவுகளில் இன்னும் உணர்வோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-


ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html


திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html 

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html